தண்ணீரை தேடி அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு வரும் யானைகள் கூட்டம்

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் தேடி யானைகள் கூட்டமாக வருவதால் பொதுமக்கள் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலையின் அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணையை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான யானைகள், மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. அங்குள்ள வனகுட்டைகள் நீர் இன்றி வற்றிய நிலையில் உள்ளது. இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி வரட்டுப்பள்ளம் அணைக்கு நாள்தோறும் வருகின்றன.

யானை நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் பொதுமக்கள் அணையை சுற்றி உள்ள வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Exit mobile version