உடுமலைப்பேட்டை அருகே சாலைகளில் சுற்றித்திரியும் யானைகள்

உடுமலைப்பேட்டை அருகே சாலைகளில் சுற்றித்திரியும் யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையிலிருந்து மூணாறுக்குச் செல்லும் மறையூர் மற்றும் காந்தலூர் வனப்பகுதிகளில் காட்டு யானைகள் தஞ்சம் புகுந்துள்ளன. இந்த காட்டுயானைகள், விவசாய நிலங்களை சேதப்படுத்துவது மற்றும் சாலைகளின் நடுவே சுற்றித்திரிவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

கோடை காலத்தில் ஏற்பட்டிருக்கும் நீர்ப் பற்றாக்குறை காரணமாகவே யானைகள் இடம்பெயர்வதாகவும், இதற்கு வனத்துறையினர் உரிய தீர்வு காணவேண்டும் என்றும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version