நகரப்பகுதிகளில் முழுமையான மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது -அமைச்சர் தங்கமணி

புயலால் பாதிக்கப்பட்ட நகர பகுதிகளில் முழுமையாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டு விட்டதாக, மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் வருங்கால இந்தியா என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் மாசில்லாத எரிபொருள் தயாரிப்பிற்கான போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் மின்சார துறைத் அமைச்சர் தங்கமணி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டு கார் பந்தயத்தை தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் இணைப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறினார்.

 

 

 

Exit mobile version