சென்னையில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கம்

சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிட உள்ளதாக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் .எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், தலைமைச் செயலகத்தில், நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர், சுற்றுச் சூழல் நலனை கருதி, ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடன் உதவியோடு, 12 ஆயிரம் புதிய தரத்திலான பேருந்துகளையும், 2,000 மின்சாரப் பேருந்துகளையும் வாங்கிடும் திட்டம் நடப்பு நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதுகுறித்த அறிவிப்பை தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Exit mobile version