அரசு பள்ளியில் கல்வி சீர்வரிசை வழங்கும் விழா

சென்னை எம்ஜிஆர் நகரில், அரசு பள்ளியில், கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது.

எல்கேஜி முதல் 8 ஆம் வகுப்பு வரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த அரசு பள்ளியில் பயில்கின்றனர். பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் இவ்விழாவில், ஆசிரியர்கள், பெற்றோர் ஒன்றிணைந்து, கல்வி உபகரணங்களை மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளிக்கு வழங்கினர்.

நோட்டு புத்தகங்கள், கரும்பலகைகள், விளையாட்டு உபகரணங்கள், நாற்காலிகள் என மொத்தம் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சியில், தியாகராய நகர் வட்டார கல்வி அலுவலர் சண்மூகம் கலந்து கொண்டார்.

Exit mobile version