கல்வி மற்றும் மருத்துவத்தை அரசு கொடுக்காமல் நாட்டை நிர்வகிக்க முடியாது -ராகுல்காந்தி

கல்வி மற்றும் மருத்துவத்தை அரசு கொடுக்காமல் நாட்டை நிர்வகிக்க முடியாது என்று ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக அங்கு சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தொழிலதிபர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கல்வி மற்றும் மருத்துவத்தில் தனியார் துறைகள் சிறப்பாக உள்ளதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, இரு துறைகளையும் அரசு வழங்காமல் நாட்டை வழிநடத்த முடியாது என நம்புவதாக கூறினார்.

 

Exit mobile version