ஆன்லைன் மூலம் வில்லங்க சான்றிதழ் பெறும் வசதி அமலுக்கு வந்தது. வில்லங்க சான்று கேட்டு வரும் பொதுமக்களுக்கு, சான்றிதழை வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஆன்லைன் மூலம் வில்லங்க சான்று பெறும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைதார். இந்த திட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, நேற்று ஒரே நாளில் மட்டும், ஆயிரத்து 769 பேருக்கு ஆன்லைனில் வில்லங்க சான்று அனுப்பி வைக்கப்பட்டது.
Discussion about this post