முறைகேடு நடைபெற்ற 10 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த பரிந்துரை: தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்குமா?

தமிழகத்தில் 10 இடங்களில், மறு வாக்குப்பதிவு நடத்துவது குறித்த அறிவிப்பை, தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவின் போது, தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, எட்டு இடங்கள் மற்றும் பூந்தமல்லி, கடலூர் தொகுதிகளில் தலா ஓர் இடம் என 10 இடங்களில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து ஆய்வு செய்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, அந்த இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையருக்கு பரிந்துரை செய்தார். இந்த நிலையில் 10 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்துவது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version