சர்வதேச போட்டியில் இருந்து பிராவோ ஓய்வு

 

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுன்டர் பிராவோ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டுவைன் பிராவோ, 35வது வயதில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான இவர், 164 ஒருநாள், 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 66 சர்வதேச 20 ஓவர் போட்டிகளிலும் பிராவோ விளையாடியுள்ளார்.

அதிரடி பேட்ஸ்மேன், சிறந்த பந்து வீச்சாளர் என பன்முக திறமைகளோடு வலம் வந்த இவர் உலக அளவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர்.

விக்கெட் வீழ்த்தியவுடன் மைதானத்தில் பிராவோ ஆடும் நடனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

சர்வதேச போட்டிகளில் இருந்து பிராவோ ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் தொடர்ந்து விளையாடுவார்.

 

Exit mobile version