எல்லையின் பதற்ற நிலை காரணமாக முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

எல்லையில் நிலவி வரும் பதற்ற நிலை காரணமாக முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

எல்லையில் கடந்த 2 நாளில் பாகிஸ்தான் படையினர் மற்றும் தீ தீவிரவாதிகள் 35 முறை தாக்குதல்கள் நடத்தியுள்ள நிலையில், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால், டெல்லிக்கு ஹை-அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 29 முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மேற்கு கடற்படை தலைமையகம், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய துணை ராணுவ படையினருடன், ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா காவல்துறையும் தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

Exit mobile version