டெல்லியில் தொடர்ந்து பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

டெல்லியில் தொடர்ந்து பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இந்த பாதிப்பு தலைநகர் டெல்லியிலும் எதிரொலித்து வருகிறது.

சில தினங்களாக டெல்லியில் தொடர்ந்து பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அதிகாலை வேளைகளில் ராஜபாதை, லோதி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைப்பயணம் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

Exit mobile version