டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்றி கோவை நீதிமன்றம் உத்தரவு

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பணியாற்றிய டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என விஷ்ணுபிரியாவின் பெற்றோர், கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கு விசாரணையில் நிறைய முரண்பாடுகள் உள்ளதாக தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Exit mobile version