குடிபோதையில் காவல் உதவி ஆய்வாளருக்கு முத்தம் கொடுத்த இளைஞர்

ஐதராபாத்தில் குடிபோதையில் காவல் உதவி ஆய்வாளருக்கு முத்தம் கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தெலங்கானாவில் போனால என்று அழைக்கப்படும் அம்மாநில மக்களின் சம்பிரதாய திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஐதராபாத்தில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு நடனமாடியபடி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது குடிபோதையில் இருந்த பனு என்ற இளைஞர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மகேந்திராவை கட்டிபிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இதையடுத்து அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version