மதுபோதையில் போலீசாருடன் தகறாறு செய்த வாலிபர்

திருச்சியில் போலீசாரிடம் தகறாறு செய்த வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களின் வெளியாகி வைரலான நிலையில் தற்போது அவர் மன்னிப்புக் கேட்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் மதுபோதையில் இளைஞர் ஒருவர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலருடன் வாக்குவாதம் செய்தார். தகாத வார்த்தையில் பேசிய அவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் காவலர்களின் நிலையையும், பொறுமையையும் விளக்குவதாக இருந்தது.

தகறாறில் ஈடுபட்ட இளைஞர் திருச்சி மாவட்டம் வரகனேரி பகுதியைச் சேர்ந்த கதிரேசன் என்பது விசாரணையில் தெரியவந்தது. மதுபோதை தெளிந்த கதிரேசன் காந்தி மார்கெட் போலீசில் சரணடைந்து தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார். கதிரேசனைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது கதிரேசன் மன்னிப்பு கேட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Exit mobile version