குடிபோதையில் மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு

சென்னை கோடம்பாக்கத்தில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து, அதே தீயில் கணவனும் சிக்கி, இருவரும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் அசோகா அவென்யூ பகுதியில், வடிவேல், அமுதா தம்தியினர் வசித்து வந்தனர். வடிவேல் போஸ்ட் ஆபீசில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, பென்ஷன் பணத்தில் குடும்பம் நடத்தி வருகிறார். இவர் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போட்டுவதை வழக்கமாக கொண்டவர் என கூறப்படுகிறது.

இந்தநிலையில், குடிபோதையில் சண்டை போட்டு பேசிக்கொண்டிருந்த போது, வடிவேலு தனது மனைவியின் மீது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குச்சியால் பற்ற வைத்து விட்டதாகவும், அந்த தீயானது வடிவேல் மீதும் பரவியதாக கூறப்படுகிறது.

தீ பரவியதால் புகை வெளியே வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version