டெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஊக்க மருந்துகள் கடத்தல்

 

பாங்காக்கிற்கு கடத்த முயன்ற 2 கோடி ரூபாய் மதிப்புள்ள அனபோலிக் ஊக்க மருந்து மற்றும் 1 புள்ளி 28 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை டெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகள் கைப்பற்றினர்.

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் சோதனையின் போது அனபோலிக் ஊக்க மருந்துகளையும் வெளிநாட்டு பணத்தையும் பாங்காக்கிற்கு கடத்த முயன்ற ஒருவரை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அனபோலிக் ஊக்க மருந்துகளின் மதிப்பு 2 கோடி ரூபாய் என்றும், வெளிநாட்டு பணத்தின் மதிப்பு 1 புள்ளி 28 கோடி ரூபாய் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்த முயன்ற நபரை கைது செய்த காவல் துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version