தஞ்சாவூர் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி – வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்

தஞ்சை, வெண்ணாற்று நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாயை வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை, நெய்குன்னம் வெண்ணாற்று நீரில் 3 மாணவர்கள் மூழ்கி உயிரிந்தனர். விவேக், கிருபாகரன் மற்றும் செல்வக்குமார் ஆகியோர் கடந்த 26 ஆம் தேதி அன்று வெண்ணாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மூழ்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு, முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களிடம் வழங்கினார்.

 

Exit mobile version