நாடாளுமன்ற உறுப்பினரின் சொந்தநிதியில் மக்களுக்கு குடிநீர் விநியோகம்

கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம் தன் சொந்த நிதியில் இருந்து லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தை துவக்கியுள்ளார்.

பருவ மழை பொய்த்ததாலும் கோடைக்காலம் தொடங்கவுள்ளதாலும் நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக, வறட்சியான பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்ய நாமக்கல் எம்.பி.சுந்தரம் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்து ஆயத்தமானார். குடிநீர் விநியோகத்தை சத்துணவு மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா மற்றும் அதிமுக எம்.பி., சுந்தரம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

Exit mobile version