அரசு போக்குவரத்து கிளை மேலாளரை தாக்கிய திமுக நிர்வாகி

கமுதி அரசு போக்குவரத்து கிளை மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுகவை சேர்ந்த கும்பகோணம் மண்டல தொழிலாளர் முன்னேற்ற சங்க, முன்னாள் தலைவர் ராமச்சந்திரனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு போக்குவரத்து கிளை மேலாளராக தனபால் பணியாற்றி வருகிறார். திமுக நிர்வாகியும், நடத்துநருமான ராமச்சந்திரன் கடந்த மாதம் முறையாக விடுப்பு கடிதம் கொடுக்காமாலும், முன்னறிவிப்பும் இன்றி, பணிக்கு வராமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால், ராமச்சந்திரன் பணிக்கு வரவில்லை என வருகை பதிவேட்டில் மேலாளர் தனபால் பதிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடத்துநர் ராமச்சந்திரன், கிளை மேலாளர் அலுவலகத்திற்குள் சென்று தனபாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து மேலாளர் தனபால், திமுக நிர்வாகி ராமச்சந்திரன் மீது காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, கமுதி காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனை தேடி வருகின்றனர்.

Exit mobile version