திமுக ஆட்சி மக்களுக்கு எந்த வித நலத்திட்டங்களும் கொண்டு வரவில்லை!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி அதிமுக பிரமுகர் தட்சிணாமூர்த்தி தலைமையில் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் நடைபெற்றது. கட்சியில் இணைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பின்னர் விழாவில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்க கூடிய கட்சி என்று தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் 150 கோடியில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது என்றும், திமுக அரசால் மக்களுக்கு எந்த வித திட்டங்களையும் கொண்டு வரமுடியவில்லை எனவும் குற்றம் சாட்டினார். திமுகவின் அவல நிலையை புரிந்து கொண்டு தான், பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர் என பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version