கடலூரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த திமுக கட்சி கொடிகள் அகற்றம்

கடலூரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த திமுக, திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சிகளின் கொடி மற்றும் பெயர் பலகைகள் அகற்றப்பட்டன.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்த கட்சி கொடிகள் மற்றும் பெயர் பலகைகள் அகற்றப்பட்டன. திமுக, திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவைகளின் கொடி கம்பங்கள், பெயர் பலகைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. தங்களின் கோரிக்கையை நிறைவேற்றிய காவல் துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினார்.

Exit mobile version