தி.மு.க.வின் சந்தர்ப்பவாத அரசியல் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது

தி.மு.க.வின் சந்தர்ப்பவாத அரசியல் தோலுரித்து காட்டப்பட்டிருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் மோதிரங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்றார்.

விஞ்ஞானப்பூர்வமான ஊழலை தி.மு.க. செய்திருப்பதாக சுட்டிக் காட்டிய அமைச்சர் ஜெயக்குமார், தி.மு.க.வின் சந்தர்ப்பவாத அரசியல் தோலுரித்துக் காட்டப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version