காவல் உதவி ஆணையரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட திமுக எம்.எல்.ஏ

 

தலைமைச் செயலகத்திலிருந்து, வீட்டுக்குத் திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் கான்வாய் அருகே, காவல் உதவி ஆணையர் கொடிலிங்கம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் தடுத்தும் கேட்காமல், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் எழிலன் நாகநாதன், அத்துமீறி கான்வாய் அருகே சென்று ஸ்டாலினை வழியனுப்பி வைத்தார். பின்னர், உதவி ஆணையர் அருகே வந்தவர், எப்படி என்னைத் தடுக்கலாம் என குரலை உயர்த்திபடி கேட்டதுடன், மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள் என்று பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டார். எம்.எல்.ஏவின் செயல் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது.

Exit mobile version