விதவைப் பெண்ணின் சொத்தினை அபகரித்து கட்சி அலுவலகம் நடத்தும் திமுக உறுப்பினர்

விதவைப் பெண்ணின் சொத்தினை அபகரித்து கட்சி அலுவலகமாக பயன்படுத்திவரும் திமுக மாவட்ட துணைச் செயலாளரை கண்டித்து, பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளைம் அருகேயுள்ள அய்யன் தோட்டம் பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமி என்பவர், தனது கணவன் சிவராமனை இழந்து தனியாக வாழ்ந்து வருகிறார். சிவராமனின் இறப்பிற்கு பின், அவருடைய பெற்றோர், விஜயலட்சுமிக்கு சொந்தமான வீட்டை அபகரித்து, அவரை இரு குழந்தைகளுடன் வெளியேற்றிவிட்டனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில்,சிவராமனின் தந்தை திமுக வை சேர்ந்தவர் என்பதால், அவருடன் திமுக மாவட்ட துணை செயலாளர் சேகர் என்பவர் இணைந்து, விஜயலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளை கொன்று விடுவதாக மிரட்டி வந்துள்ளனர். மேலும், அபகரித்த வீட்டை, திமுக இளைஞரணி அலுவலகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

வீட்டை மீட்டுத் தரக் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Exit mobile version