தேர்தலையொட்டி தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக-மதிமுக பேச்சுவார்த்தை

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுக மற்றும் மதிமுகவின் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் மதிமுக சார்பில் பொருளாளர் கணேசமூர்த்தி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தி.மு.கவுடன் கூட்டணி குறித்த முதற்கட்ட பேச்சு சுமூகமாக முடிந்திருப்பதாக மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version