சிகரெட் வாங்கி வர மறுத்த இளைஞரை, கத்தியால் குத்திய திமுக பிரமுகர்

திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் சங்கர். அவரது மகன் ஷியாம் என்கிற சாமுவேல். இவர் நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது காரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த திமுகவை சேர்ந்த பொன்ராஜ் என்கிற தளபதி ராஜ், அந்த இளைஞர்களிடம் சிகரெட் வாங்கி வருமாறு மிரட்டியுள்ளார்.

சிகரெட் எல்லாம் வாங்கி வர முடியாது என்று கூறிவிட்டு அந்த இளைஞர்கள் அங்கிருந்து நடையைக் கட்டி உள்ளனர். மது போதையில் இருந்த பொன்ராஜ் ஆத்திரத்தில் தான் காரில் வைத்திருந்த கத்தியைக் கொண்டு வந்து ஷியாம் என்கிற இளைஞரின் மார்பில் பலமாக குத்தியுள்ளார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த அந்த இளைஞரை சக நண்பர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திமுக பிரமுகர் பொன்ராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் பொன் ராஜ் வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த காரை ஷியாம் சக நண்பர்கள் கொளுத்தி விட்டு தலைமறைவாகி உள்ளனர். இதனால் பெரிய குப்பம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரனின் நிழல் போல சுற்றி வந்த திமுக பிரமுகர் பொன்ராஜ் செய்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.

Exit mobile version