அவதூறு வழக்கில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆஜராக உத்தரவு

முதலமைச்சர் தொடுத்த அவதூறு வழக்கில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மார்ச் மாதம் 21ம் தேதி நேரில் ஆஜராக, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 13 ம் திமுக தலைவர் ஸ்டாலின், தெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல் வெயிட்ட வீடியோ ஒன்றை மையமாக வைத்து முதல்வர் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தன் மீது அவதூறு பரப்புவதாகவும், தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகவும் முதல்வர் சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி சுபாதேவி முன்பு விசாரணைக்கு வந்த போது, ஸ்டாலினை வரும் மார்ச் மாதம் 21 ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார்.

Exit mobile version