திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த எதையும் நிறைவேற்றவில்லை – பி.வி.ரமணா குற்றச்சாட்டு !

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிப்பட்டில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான பி.வி.ரமணா, முன்னாள் எம்.பி., திருத்தணி கோ.ஹரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய முன்னாள் எம்பி., திருத்தணி கோ.ஹரி, முரசொலி பத்திரிகை நஷ்டத்தில் இயங்கியபோது, உதவி செய்து காப்பாற்றியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என தெரிவித்தார்.

Exit mobile version