அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு

சென்னையில் தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் உருவச்சிலையை சோனியா காந்தி, திறந்து வைத்தார்.

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 8 அடி உயர வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தி.மு.க. தோழமை கட்சித் தலைவர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Exit mobile version