நாளை திமுக செயற்குழு கூட்டம்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அந்தக் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவராக உள்ள ஸ்டாலின் தலைவர் பொறுப்பை ஏற்பதற்கான வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், தமிழகம் முழுவதும் அஞ்சலி கூட்டங்களை நடத்த தொண்டர்கள் பணிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.  வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்தும் செயற்குழுவில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Exit mobile version