ஆளவிடுங்கப்பா..திமுகவை கண்டித்து திமுக கவுன்சிலரே ராஜினாமா!

திருநெல்வேலி மாநகராட்சியில் நீடித்து வரும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத விடியா அரசை கண்டித்து திமுகவை சேர்ந்த கவுன்சிலரே ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். பாளையங்கோட்டை மண்டலத்தில் மணப்படை வீடு குடிநீரேற்றும் நிலையத்தை திறக்க பல முறை கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பூட்டியே வைத்திருப்பதாக வேதனை தெரிவித்த 6வது வார்டு திமுக கவுன்சிலர் பவுல்ராஜ், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு விடியா அரசின் அதிகாரிகள் உரிய மரியாதை அளிக்காததால் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version