விடியா திமுக அரசு 22 மாத காலமாக அதிகார மமதையில் செயல்படுகிறது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுகவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைப்பதை தடுக்கவே விடியா திமுக அரசு திட்டமிட்டு பொய் வழக்கை போட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.சென்னை துறைமுகம் ராஜாஜி சாலையில் உள்ள அம்மா பயிலகத்தில் அதிமுக சார்பில் மகளிர் தினத்தை ஒட்டி மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ராயபுரம் மனோ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்ட மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விடியா திமுக அரசு, 22 மாத காலமாக அதிகார மமதையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு வந்த நிலையில், தற்போது இடைக்கால பொதுச்செயலாளர் மீதும் பொய் வழக்கு போட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். தென் மாவட்டங்களில் அதிமுகவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைப்பதை தடுப்பதற்காக திட்டமிட்டு பொய் வழக்கை போட்டுள்ளதாக சாடினார்.

Exit mobile version