விருதுநகர் ரத்த வங்கிகளில் சேகரிக்கப்பட்ட ரத்தங்களை மறு பரிசோதனை செய்ய மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் 14 ரத்த வங்கிகளில் உள்ள ரத்தங்களை மறுபரிசோதனை செய்ய மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த பாண்டி என்பவரின் 8 மாத கர்ப்பிணி மனைவிக்கு அரசு மருத்துவமனையில் பரிசோதனையின் போது ரத்தம் செலுத்தப்பட்டதாக தெரிகிறது. பின்னர் நடைபெற்ற பரிசோதனையில், அவருக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரத்த வங்கியில் அலட்சியமாக செயல்பட்ட 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மாவட்ட சுகாதாரத்துறையின் உத்தரவின்பேரில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 14 ரத்த வங்கிகளில் சேகரிக்கப்பட்டுள்ள ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version