தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் 2 குழந்தைகளை தத்தெடுத்த மாவட்ட ஆட்சியர்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த பீகாரை சேர்ந்த ரத்தன் குமார் தாகூர் மற்றும் சஞ்சய் குமார் சிங் ஆகியோரது 2 பெண் குழந்தைகளை ஷேக்புரா மாவட்ட ஆட்சியர் இனாயத் கான் தத்தெடுத்துள்ளார். இந்த குழந்தைகளின் எதிர்காலத்துக்காக வங்கி கணக்கு தொடங்கியுள்ள அவர், அதில் தனது 2 நாள் ஊதியத்தை செலுத்தியுள்ளார்.

மேலும் பொதுமக்களும் அந்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண் குழந்தைகளை தத்தெடுத்துள்ள ஆட்சியர் இனாயத் கானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Exit mobile version