தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதைக்கருத்தில் கொண்டு பிரமதர் மோடி நாடு முழுவதும் உள்ள பாஜக நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், இன்று தமிழகத்தின் மத்திய சென்னை, வட சென்னை, திருவள்ளூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள பாஜக நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அப்போது, தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மோடி ஆலோசனைகள் வழங்கினார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version