1963-ம் ஆண்டு கடலில் மூழ்கிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

50 ஆண்டுகளுக்கு முன்பு நீலாங்கரை கடலில் விழுந்த போர் விமான பாகங்களை ஆழ்கடல் நீர்மூழ்கி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

நீலாங்கரை கடலில் கடந்த 1963ம் ஆண்டு சிறிய ரக போர் விமானம் ஒன்று கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதன் பாகங்களை தேடும் பணியில் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் அரவிந்த தலைமையிலான குழுவினர் 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பாக அவர்களுக்கு அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், அரவிந்த் தலைமையிலான குழுவினர் நீலாங்கரை கடலில் 1 1/2 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்கடலில் தேடியபோது இந்த விமானத்தின் பாகங்களை கண்டறிந்துள்ளனர். அந்த காட்சிகளை பதிவு செய்த அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.

Exit mobile version