பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து; தொலைபேசி இணைப்புகள் முற்றிலும் துண்டிப்பு

பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, சென்னை முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் தொலைபேசி இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் தொலைத்தொடர்பு இணைப்பு கருவிகள் பெரும்பாலானவை எரிந்து சேதமடைந்தன. இதனால் சென்னையில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்ட பி.எஸ்.என்.எல் தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காவல் நிலையங்களில் உள்ள தொலைபேசி இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் அவசர எண்ணாண 100 மட்டும் தற்போது செயல்பாட்டில் உள்ளது.

20 ஆயிரம் இணைப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில், 8 ஆயிரம் இணைப்புகள் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டதாக பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொலைத்தொடர்பு சேவை பழைய நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Exit mobile version