மாற்றுத்திறனாளிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர் – சமூக நலத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கூட்டியக்கம் சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் கைவிடப்படுவதாக அதன் தலைவர் தீபக் தெரிவித்துள்ளார்.
கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு வழங்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் கூட்டியக்கம் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. .

இதனைத் தொடர்ந்து, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, மாற்றுத் திறனாளிகள் கூட்டியத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுள்ளனர்.

 

 

Exit mobile version