சபரிமலையில் தடையை மீறி தங்கிய பக்தர்கள் – காவல்துறை கைது

தடையை மீறி சபரிமலையில் இரவு தங்க முயன்ற 100-க்கும் மேற்பட்ட பக்தர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, கேரளாவில், பா.ஜ.க. மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சபரிமலையில் சன்னிதானத்தில் இரவில் தங்க சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தடையை மீறி, சபரிமலையில் தங்கிய பக்தர்களை செல்லுமாறு, பக்தர்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தினர். இதனை கண்டித்து, 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சன்னிதானம் முன் பஜனை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அதிருப்தியடைந்த காவல்துறை, அவர்களை கைது செய்தனர்.

Exit mobile version