வெயிலின் தாக்கத்தால் அவதியுறும் பக்தர்கள்

ராமேஸ்வரத்தில் அதிகளவில் வெயில் கொளுத்திவரும் நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கி தனது ஆட்டத்தை நடத்தி வருகிறது. மாநிலத்தில் சில இடங்களில் கோடைமழை பெய்துவருவதால் நிலைமை ஓரளவிற்கு தளர்ந்துள்ளது. ஆயினும் பல பகுதிகளில் கோடை வெயிலின் அதிகமான தாக்கத்தால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள் வெயிலின் கொடுமை தாங்காமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கோடை விடுமுறையையொட்டி கோயிலுக்கு குடும்பத்துடன் வரும் பக்தர்கள், குழந்தைகளுடன் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்கும்வகையில் கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Exit mobile version