புனித வியாழவையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
புனிதவெள்ளி மற்றும் ஈஸ்டரை முன்னிட்டு வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் பெரிய வியாழனையொட்டி இயேசு சீடர்களின் பாதம் கழுவியதை குறிக்கும் விதமாக பேராலயத்தின் கலையரங்கில் பங்குதந்தையர்கள் சீடர்களின் பாதங்களை கழுவி திருச்சடங்குகளை நிறைவேற்றினர்.
தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றன. புனித வெள்ளியின் முக்கிய நிகழ்வாக தேவாலயத்தில் இன்று இரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெறவுள்ளது.