வன்முறைக்கு காரணம் பா.ஜ.க. – கேரள அரசு குற்றச்சாட்டு

சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களை தாக்கியது, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.கவினர் தான் என கேரள அமைச்சர் இபி ஜெயராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வன்முறையில் 10 அரசு பேருந்துகள் தாக்கப்பட்டதாகவும், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை திரும்ப அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பத்திகையாளர்கள் 10 பேர் மீதும், பக்தர்கள் 5 பேர் மீதும், 15 போலீசார் மீதும் பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காடுகளில் பதுங்கி இருந்து திடீரென தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என கேரள மாநில பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version