தேனியில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

தேனி மாவட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களை நேரடியாக சந்தித்து, அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அரண்மனை புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைப்பட்டி, வீரசின்னம்மாள்புரம், அய்யனார்புரம், மரியாயி பட்டி, பள்ளபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களை நேரடியாக சந்தித்து, அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். கோரிக்கைகளை மனுக்களாகவும் பெற்றுக்கொண்டார். அதையடுத்து பொதுமக்களிடம் பேசிய துணை முதலமைச்சர், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை அரசு தீவிரமாக கவனித்து வருவதாகவும் கூறினார். இதுவரை அளிக்கப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறிய அவர், தற்போது தரப்பட்டுள்ள மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

Exit mobile version