ஓட்டு விழாது என தெரிந்தும் மூன்று இந்துக் கோயில்களை இடித்தேன் – டி.ஆர்.பாலு சர்ச்சை பேச்சு !

மதுரையில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடைபெற்ற மாநாட்டில், முன்னாள் திமுக மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று தெய்வங்களின் கோயில்களை, ஓட்டு விழாது என தெரிந்தும் இடித்தேன் எனவும், ஓட்டு எப்படி வாங்க வேண்டும் என்பது, தனக்கு நன்றாக தெரியும் எனவும், சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேலும் கங்கை, காவிரி, மற்றும் கொள்ளிடத்தை வெடி வைத்து தகர்த்து பாலம் கட்டினேன், ஆனால் கடவுள் என்னை ஒன்றும் செய்யவில்லை எனவும், இந்து கடவுள்களுக்கு எதிராக பேசியுள்ளார். இந்து மக்களுக்கு எதிரான கட்சி திமுக இல்லை என, விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின் என்ன தான் வெற்றுப்பேச்சு பேசினாலும், தொடர்ந்து திமுக இந்து மதத்திற்கு எதிரான செல்பாட்டில் இருப்பது, பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version