News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

டெல்டா மாவட்டங்களில் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆய்வு

Web Team by Web Team
November 16, 2021
in TopNews, அஇஅதிமுக, அரசியல், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
டெல்டா மாவட்டங்களில் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆய்வு
Share on FacebookShare on Twitter

டெல்டா மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகளை அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் நேரில் பார்வையிடுகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டம் புவனகிரி டவுன் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.image

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த அவர்கள், அண்ணா திமுக சார்பில் நிவாரண பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழி தேவன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதைதொடர்ந்து, சிதம்பரம் தொகுதிக்குப்பட்ட பூவாலை பகுதியில் மழை, வெள்ள பாதிப்புகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பூவாலை ஊராட்சியில் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திறந்த வாகனத்தில் சென்று பாதிப்புகளை ஆய்வு செய்த அவர்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் சேத விவரங்களையும், குறைகளையும் கேட்டறிந்தனர்.

அப்போது இடுப்பளவு வெள்ளத்தில் மூழ்கி அழுகிய பயிர்களை விவசாயிகள் எடுத்து வந்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரிடம் காண்பித்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Tags: AdmkcuddaloreDeltaFloodvisitnewsjtamil nadu
Previous Post

தென்பெண்ணை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்த சோகம்

Next Post

சென்னைக்கு 18ஆம் தேதி ரெட் அலர்ட்

Next Post
சென்னைக்கு 18ஆம் தேதி ரெட் அலர்ட்

சென்னைக்கு 18ஆம் தேதி ரெட் அலர்ட்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist