டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்பு மனு மீது நாளை பரிசீலனை

டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 14ந் தேதி அன்று தொடங்கியது. முதல் நாளிலிருந்து வேட்பு மனுத் தாக்கல் செய்ய பல்வேறு கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்நிலையில் வேட்புமனுத் தாக்கல் இன்று மதியம் 3 மணியளவில் நிறைவடைகிறது. வேட்பு மனு மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனு திரும்ப பெற வரும் 24ம் தேதி கடைசி நாளாகும். வாக்குகள் பிப்ரவரி 11-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

Exit mobile version