சக வீரரைத் திட்டிய வார்னர்.. டெல்லி அணியின் தோல்விக்கு இதுதான் காரணமா?

செவ்வாய் (11/04/2023) இரவு நடைபெற்ற டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வார்னர் 51, அக்சர் படேல் 54 ஆகியோர் கணிசமான ரன்களை குவிக்க 172 ர்ன்களை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எட்டியது. பிற்கு பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது இறுதிப் பந்தில் இலக்கை எட்டி தன்னுடைய முதல் வெற்றியை இந்த சீசனில் பதிவு செய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஐபிஎல்லில் ரோகித் சர்மா அரைசதம் விளாசினார்.

இப்போட்டியில் டெல்லி அணி பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது வார்னரும் லலித் யாதவும் களத்தில் இருந்தனர். வார்னர் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க தவறினார் மும்பையின் பியூஸ் சாவ்லா. அதனால் ரன் எடுக்க ஓடினார் வார்னர். ஆனால் எதிரில் இருந்த லலித் யாதவ் ஓடுவதற்கு முனைப்புக் காட்டவில்லை. இதனால் க்ரவுண்டிலேயே வார்னர் லலித்யாதவை சரமாரியாக திட்டினார். மேலும் தொடர்ந்து மூன்று மேட்களாக வார்னர் மட்டுமே அணிக்கு ரன் எடுத்துக் கொடுக்கிறார். இன்றைய போட்டியில் அவர் ரன் எடுத்தாலும் அவரிடம் விரக்தி தென்பட்டது. இந்த சீசனில் டெல்லி அணி விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியையே தழுவியுள்ளது.

Exit mobile version