காதல் திருமணம் செய்து பெற்றோரை தவிக்கவிட்ட பாசமிகு மகள் பெற்றோர் விபரீத முடிவு!

தூத்துக்குடி மாவட்டம் கீழவல்லநாடு பகுதியை சேர்ந்தவர்கள் சின்னதுரை, சங்கரம்மாள் தம்பதியர். இவர்களது மகள் பேச்சியம்மாள், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவருடன் காதல் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து விரக்தியில் காணப்பட்ட சங்கரம்மாள், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சாயர்புரம் பகுதிக்கு தோட்ட வேலைக்கு சென்ற தந்தை சின்னதுரையும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மகள் காதல் திருமணம் செய்துகொண்டதை ஏற்க முடியாமல் தாய், தந்தை தற்கொலை செய்துகொண்டுள்ளதாக உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காலத்தில் காதல் திருமணம் செய்துகொள்வது ஒன்றும் தப்பில்லை, ஆனால் அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வங்கள் என்று போற்றப்படும் தாய், தந்தையரை மதிக்காமல் இளசுகள் எடுக்கும் முடிவு, இதுபோன்ற அவலம் ஏற்பட காரணமாவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version