தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதியை டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

கடந்த 2019 செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரம் 2019 நவம்பர் 12ம் தேதி வெளியானதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவையர் ஆகிய பணியிடங்களுக்கு கடந்த மாதம் 19  ஆம் தேதி துவங்கி கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு மார்ச் 20-ம் தேதி துவங்கி 31-ம் தேதி வரையும், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு ஏப்ரல் 2 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதற்கான அழைப்பாணை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version