இந்திய அணியின் தோல்வியால் வசைபாடப்பட்ட அர்ஷ்தீப் சிங்! விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

virat kohli arshdeep singh

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கியமான கேட்சை தவறவிட்ட அர்ஷ்தீப் சிங்கை ரசிகர்கள் விமர்சித்து வரும் நிலையில், அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

பிஷ்னாய் வீசிய 18-ஆவது ஓவரில் ஆசிப் அலி அடித்த பந்தை, அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடிக்க முற்பட்டார். ஆனால், சுலபமான அந்த கேட்ச்-ஐ அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார்.

இந்திய அணி போட்டியில் தோல்வியடைய இதுவும் ஒரு காரணமாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் பலரும் அர்ஷ்தீப் சிங்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், இக்கட்டான சூழலில் தவறு செய்வது இயல்பு என அர்ஷ்தீப் சிங்கிற்கு விராட் கோலி ஆதரவு தெரிவித்துள்ளார்.

Exit mobile version